Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஐப்பசிமாத அமாவாசை சிறப்புபூஜை நடைபெற்றது.
ஐப்பசிமாத அமாவாசை மற்றும் நேற்று முன்தினம் தீபாவளி தினத்தை முன்னிட்டு, சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்து உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வாணையுடன் சிறப்பு தோற்றத்தில் காட்சியளித்தார். சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீணட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.